தலைமலையில் தவம் இருக்கிறார் கோபால்
சென்னை:
வீரப்பனிடம் இருந்து அழைப்பு வருமா என்று தலைமலைப் பகுதியில் "தவம்இருக்கிறார் நக்கீரன் கோபால்.
சனிக் கிழமை மாலை வரை தகவலோ அழைப்போ வீரப்பனிடம் இருந்து வரவில்லை.
கன்னட நடிகர் ராஜ்குமார் உள்ளிட்ட நால்வரை மீட்க நான்காவது முறையாககாட்டிற்குள் சென்றுள்ளார் அரசு தூதர் நக்கீரன் கோபால்.
அவர் சத்தியமங்கலம் சென்று காட்டுக்குள் நுழைந்து இரண்டு நாட்களாகி விட்டன.
சத்தியமங்கலம், ஆசனூர், தலைமலை காட்டுப் பகுதிகளில் மழை வெளுத்துவாங்குகிறது. இரவு பகலாக பெய்து வரும் பேய் மழை காரணமாக காட்டுக்குள் அங்கு,இங்கு என அசைய முடியாமல் அதே இடத்தில் காம்ப் போட்டுக் காத்திருக்கிறார்கோபால்.
அதற்கு மேல் ஒரு அடி கூட கோபாலால் எடுத்து வைக்க முடியாது. மழைக்குபயந்தல்ல ; அதற்கு மேல் காட்டுக்குள் நுழைய வேண்டுமானால் வீரப்பனின் அனுமதிகிடைத்த பிறகு தான் செல்ல வேண்டும்.
வீரப்பனிடம் இருந்து முதலில் சத்தியமங்கலம் காட்டுப் பகுதியை கடந்து உள்ளேவரலாம் என்ற தகவல் வந்து சேரும்; அதன் பின்னர் அவன் தனது கூட்டாளியைஅனுப்பி தூதரை அவனது இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்வான்.
இப்போது வீரப்பனின் தகவலுக்காக காத்திருக்கும் கோபாலிடம் இருந்து தான் அவரதுநக்கீரன் அலுவலகத்திற்கு சனிக் கிழமை தகவல் வந்துள்ளது.
காட்டில் மழை பெய்து வருவதால் காட்டில் காத்திருக்கிறேன். இன்னமும் வீரப்பனிடம்இருந்து தகவல் இல்லை. மழை காரணமாக அவனால் தகவல் தர முடியவில்லை.
கடந்த முறை நான் வீரப்பனை சந்தித்தபோதே அடுத்த தடவை நீங்கள் வரும்போது 4நாட்கள் நடக்க வேண்டியதிருக்கும் என்று கூறியிருந்தான். எனவே ராஜ்குமாருடன்தொலை தூரத்திற்கு சென்று இருப்பான் என்று நினைக்கிறேன்.
அதுவும் அவனிடம் இருந்து தகவல் வர தாமதமாவதற்கான காரணம் என்றுசென்னையில் உள்ள தனது பத்திரிகை இணை ஆசிரியர் காமராஜிடம்தொலைபேசியில் கோபால் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications