விக்கிரசிங்கேவுக்கு இலங்கை பிரதமர் சவால்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை ராணுவ நடவடிக்கை மூலம் ஒழிக்க அரசை ஆதரிக்கிறாரா என்பதை வெளிப்படையாக தெரிவிக்க ஐக்கியதேசியக் கட்சித் தலைவர் விக்கிரமசிங்கே தயாரா என்று இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்கிரமநாயகே சவால் விட்டுள்ளார்.

கொழும்பில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் அவர் பேசுகையில், இந்த சவாலை நேரடியாக விடுக்கிறேன். பதில் கூறுவது மிகவும்சுலபமானது. ஆம், இல்லை என்று மட்டும் கூறினால் போதும். விக்கிரமசிங்கே விடுதலைப் புலிகளைஆதரிக்கிறார் என்றார் அவர்.

விக்கிரசிங்கே இந்தப் புகாரை மறுத்துள்ளார்.அவர் கூறுகையில், ஆளுங்கட்சியினர்தான் விடுதலைப் புலிகளைஆதரிக்கின்றனர். அவர்கள் கட்சி சார்பில்தான்விடுதலைப் புலிகள் வேட்பாளர்களாக உள்ளனர்.

வரதராஜப் பெருமாள் போன்ற தீவிரவாதத் தலைவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்தது ஆளுங்கட்சிதான்.

ஆளுங்கட்சி சார்பில் போட்டியிடும் அகிலேஸ்வரன் என்பவர் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருப்பதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு மட்டக்களப்பில் எங்களது வேட்பாளர் சுதந்திரமாக பிரசாரம் செய்கிறார். விடுதலைப் புலிகள் ஆதிக்கம் உள்ள பகுதியில் கூட அவர் பிரசாரம்செய்வதால் எங்களுக்கும் புலிகளுக்கும் இடையே உறவு உள்ளது என்று அர்த்தம் இல்லை என்றார் அவர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+