For Quick Alerts
For Daily Alerts
Just In
நாளை வைகோ நடத்தும் பெரியார் விழா
சென்னை:
ம.தி.மு.க. சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக் கிழமை சென்னையில்நடைபெறுகிறது. வைகோ மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
ம.தி.மு.க. இலக்கிய அணி சார்பில் பெரியார், அண்ணா பிறந்த நாள் விழா சென்னைஎழும்பூரில் உள்ள இம்பிரியல் ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்குநடைபெறுகிறது.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெறும் இவ்விழாவில்அவைத் தலைவர் எல்.கணேசன், மத்திய அமைச்சர்கள் கண்ணப்பன், செஞ்சிராமச்சந்திரன், துணைப் பொதுச்செயலாளர் கவிஞர் குடியரசு ஆகியோர் பேசுகின்றனர்.
விழாவை ஒட்டி நடைபெறும் கருத்தரங்கிற்கு கே.என்.ராமச்சந்திரன் தலைமைவகிக்கிறார். நாஞ்சில் சம்பத், சபாபதி மோகன், பாவாணன், கலைப்புலி தாணு மற்றும்பலர் பேசுகின்றனர்.
Comments
Story first published: Saturday, September 23, 2000, 5:30 [IST]