தசராவுக்குள் ராஜ்குமாரை விடுவிக்க மைசூர் தமிழ்சங்கம் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

கன்னட நடிகர் ராஜ்குமாரை தசரா விழாவுக்கு முன்பே விடுவிக்க வேண்டும் என்றுவீரப்பனுக்கு மைசூர் தமிழ்ச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மைசூர் - சாம்ராஜ் நகர் மாவட்ட தமிழச் சங்கங்கள் மற்றும் மைசூர் வித்யார்த்தி கிரியாசமிதி ஆகிய அமைப்புகள் கூட்டாக ஒரு துண்டு பிரசுரத்தை அச்சடித்துள்ளனர்.

வீரப்பன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் என்ற தலைப்பில் அதில் அவர்கள்அச்சிட்டிருப்பதாவது:

கர்நாடகத்தில் இன்று வரை தமிழர்களும் - கன்னடர்களும் சகோதர உணர்வுடன்வாழந்து வருகின்றனர். ராஜ்குமார் உட்பட நான்கு பேர் கடத்தப்பட்டவுடன் இந்தஉணர்வு பாதிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் விடுதலை தாமதமாவதால் இரு மாநில மக்களும் அமைதியின்றிஇருக்கிறார்கள். கர்நாடகத்தில் வாழும் பல தமிழர்கள் பயத்தினால் தமிழ்நாட்டிற்குசெல்ல ஆரம்பித்துள்ளனர்.

இரு மாநில மக்களும் அமைதியுடனும், பழையபடி நட்புடனும் வாழ்வது உங்கள்கையில் தான் உள்ளது.

மைசூரில் வருடா வருடம் கொண்டாடப்பட்டுவரும் தசரா விழா உலகப் புகழ் பெற்றது.இந்த வருடம் அதை ராஜ்குமார் தொடங்கி வைப்பார் என கர்நாடக அரசு அறிவித்தது.மக்கள் ஆசையும் அதுதான், கடவுள் பக்தியும், மனிதாபினாமும் உள்ள நீங்கள்ராஜ்குமாரை தசாராவுக்கு முன் விடுதலை செய்யுங்கள் என அதில் உருக்கமாகஅச்ச்சிடுள்ளனர்.

இந்த துண்டு பிரசுரம் அரசு தூதர் கோபால் மூலமாக வீரப்பனுக்கு கொடுத்துஅனுப்பப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+