தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதலை கண்டித்து போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதலை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கண்டனப் பேரணி நடத்தப்படும் என்று விடுதலை சிறுத்தைகள்அமைப்பின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

சென்னையில் சனிக் கிழமை அவர் அளித்த பேட்டி:

பா.ம.க. தலைவர் ராமதாஸ் தாக்கப்பட்டதாக பரப்பப்பட்ட வதந்தியை தொடர்ந்து பா.ம.கவினர் வன்முறை வெறியாட்டம்நடத்தியுள்ளனர். 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஏராளமான பஸ்கள் கொளுத்தப்பட்டன.

இதை கண்டித்து அக்டோபர் 1ம் தேதி பாண்டிச்சேரியில் தோழமை கட்சிகளின் ஆதரவோடு கண்டன பேரணியும், பொதுக் கூட்டமும்நடத்தப்படும்.படுகொலை செய்யப்பட்ட 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.

வன்முறையில் ஈடுபட்ட பா.ம.கவினர் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டிக்கிறோம்.

ராமதாசின் செல்வாக்கு சரிந்து வருகிறது. எனவே தனது தலைமையை நிலை நிறுத்திக் கொள்ளவும், தி.மு.க,. அ.தி.மு.க.புறக்கணிப்பில் இருந்து தப்பிக்கவும், வன்முறைகளை தூண்டுகிறார்.

பஸ்கள் எரிக்கப்பட்டதற்கான நஷ்டஈடு பணத்தை பா.ம.க.விடம் இருந்தும், தி.மு.க.விடம் இருந்தும் வசூலிக்க வேண்டும். இதைவலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்.

தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்படும் வன்முறையை கண்டித்து மாநிலம் முழுவதும் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரைகண்டனப் பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+