மதுரையில் ஒரு "வாலி
மதுரை:
மதுரை திருப்பரங்குன்றத்தில் வாலி பட பாணியில் சகோதரனின் மனைவியிடம்தவறாக நடந்து கொண்டு, அவரைக் கற்பழித்ததாக ராணுவ வீரரை போலீஸார் தேடிவருகின்றனர்.
திருப்பரங்குன்றம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பசுமலை அண்ணாநகரில் வசித்துவருபவர் உலகத் தேவர். இவரது மகள் கருப்பாயி. இவருக்கும் சாத்தங்குடிசுப்ரமணியம் மகன் அய்யர் என்பவருக்கும் கடந்த வரும் திருமணம் நடந்தது.
அய்யர் குடும்பத்தினருடன் கருப்பாயி வசித்து வந்தார். கருப்பாயியின் கணவர்அய்யரும்,அவரது குடும்பத்தினரும் வரதட்சணை கேட்டு கருப்பாயியைகொடுப்படுத்தி வந்தனராம். ஒரு நிலையில் கருப்பாயியின் தாலியை அய்யர் அறுத்துவீசினாராம்.
இந்த சம்பவத்தை சாதகமாக்கிக் கொண்டு அய்யரின் சகோதரர் கொடி என்பவர்கருப்பாயியை கற்பழித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இவர் ராணுவ வீரர்.
கணவரின் குடும்பத்தினரின் கொடுமைகள் எல்லை மீறிப் போனபோகவே,திருப்பரங்குன்றம் மகளிர் காவல் நிலையத்தில், கருப்பாயி புகார் செய்தார்.
புகாரின் அடிப்படையில், அய்யர், அவரது சகோதரர் பாண்டியை போலீஸார் கைதுசெய்தனர். அண்ணியைக் கற்பழித்த ராணுவ வீரர் கொடியை போலீஸார் தேடிவருகின்றனர்.












Click it and Unblock the Notifications