சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது ... கூறுகிறது த.மா.கா.
சென்னை:
தமிழகத்தில் சட்டம், ஒழங்கு முற்றிலும் சீர் கெட்டு விட்டது என தமிழ் மாநிலகாங்கிரஸ் முன்னணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமானஎஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கூறியுள்ளார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர் கெட்டு விட்டது. வீரப்பன் விவகாரத்தில் துவங்கி,பா.ம.கவினர் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் வரை அனைத்தும் இதனைத்தான்சுட்டிக் காட்டுகின்றன.
வீரப்பன் விவகாரத்தில், தமிழக அரசு தவறான அணுகுமுறையை பின்பற்றி இந்தப்பிரச்சினையை மேலும் சிக்கலாக்கி விட்டது. இந்தப் பிரச்சினையில், தமிழக உளவுத்துறை சரிவர செயல்படவில்லை.
வீரப்பன் காட்டில் உள்ள தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் சென்று கொண்டிருக்கின்றன.இது மிகவும் ஆபத்தானது.
சமீபத்தில் பா.ம.க தலைவர் ராமதாஸ் கார் மீது கல் வீசப்பட்ட சம்பவத்தையடுத்துபா.ம.கவினர் பஸ் எரிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டனர்.
மதுரையிலும் அழகிரி மீது திமுக தலைமை நடவடிக்கை எடுத்ததைக் கண்டித்து பஸ்எரிப்பு போன்ற சம்பவங்களில் திமுகவினர் ஈடுபட்டனர். இதெல்லாம் தமிழகத்தில்சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு விட்டது என்பதையேக் காட்டுகிறது.
தமிழக அரசின் செயலற்ற தன்மையைக் கண்டித்து 27-ம் தேதி தமிழகம் முழுவதும்அறவழியில் போராட்டம் நடத்தவுள்ளோம். மக்கள் துன்பப்படுவதைப் பார்த்துக்கொண்டு பொறுப்புள்ள எதிர்க்கட்சியால் சும்மா இருக்க முடியாது. இந்தப்போராட்டத்தை ஒடுக்க அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.
மக்களின் துயரத்தைப் போக்க முயற்சிக்காமல் எதிர்க்கட்சிகளின் போராட்டத்தைநசுக்க முயல்வது நல்லதல்ல என்று எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கூறினார்.












Click it and Unblock the Notifications