"கைத்தறி ஏற்றுமதி ரூ. 100 கோடியாக உயரும்
கோவை:
அடுத்த நிதியாண்டிற்குள் தமிழகத்தின் கைத்தறி ஏற்றுமதி ரூ. 100 கோடியாக உயரும்என தமிழக கைத்தறித் துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.
கோவையில் தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா) நடத்திய பாராட்டு விழாவில்கலந்து கொண்டு அமைச்சர் என்.கே.கே பெரியசாமி பேசியதாவது:
இந்தியாவிலேயே தமிழகம் மட்டும் தான் நபார்டு வங்கியின் மூலம் 56 சதவீதநிதியுதவியை நெசவுக்காகப் பயன்படுத்தி வருகிறது. இங்கு இந்த நெசவு, கூட்டுறவுஅமைப்பில் செயல்படுவதால் நிதி உதவி பெறுவதில் சிக்கல் எதுவுமின்றி பெறஇயலுகிறது.
தமிழகத்தில் கடந்த-98ம் ஆண்டு வரை கைத்தறித் துணிகளின் ஏற்றுமதி நாலரைகோடியாக இருந்து வந்தது. கடந்த ஆண்டு இது 40 கோடி ரூபாயாக உயர்ந்தது. நடப்புநிதியாண்டில் 40 கோடியைத் தாண்டியுள்ளது. இந்த ஏற்றுமதி அடுத்த ஆண்டிற்குள்100 கோடி ரூபாயாக உயரும் என எதிர்பார்க்கிறோம். அதற்கேற்ற வர்த்தகவிசாரணைகள் கைத்தறித் துறைக்கு கிடைத்து வருகிறது.
தமிழகம் மட்டுமே ஜவுளிக் கொள்கையை ஏற்படுத்தி மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது. மத்திய அரசு கூட இன்னும் புதிய ஜவுளிக் கொள்கை எதையும்அறிவிக்கவில் என்றார்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு கைத்தறி ஆணையாளர் டேவிதார் கூறுகையில், கடந்த 1969ம்ஆண்டு கைத்தறி கூட்டுறவுத் துறை செயல்பட்டு வருகிறது. இதுவரை நஷ்டத்தில்இயங்கி வந்த கூட்டுறவு மில்கள் சில தற்போது லாபத்தில் செயல்படுகின்றன.
அதிகாரிகளின் அலட்சியம், மற்றும் பொறுப்பற்ற மனப்பான்மையால் இப் பிரச்னைவந்துள்ளது. சர்வதேசப் பொருளாதாரத் தாராளமயமாக்கலின்போது ஏற்படும் கடும்போட்டியைச் சமாளிக்கத் தேவையான தரக் கட்டுப்பாடு நடவடிக்கையை அரசுமேற்கொண்டு வருகிறது என்றார்.
விழாவில், சைமாத் தலைவர் மாணிக்கம் ராமசாமி வரவேற்றார். முன்னாள் சேர்மன்கிருஷ்ணராஜ் வானவராயர், கருத்துக் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications