போலீஸைக் கண்டித்து வழக்றிஞர்கள் வேலை நிறுத்தம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் உள்ள பல நீதிமன்றங்களை வழக்கறிஞர்கள் புறக்கணித்ததால் நீதிமன்றபணிகள் பாதிக்கப்ட்டன.
செப்டம்பர் மாதம் 15-ம் தேதி பெண்களுக்கான சிறப்பு ரயில் பெட்டியில் சிலஆண்கள் பயணம் செய்தனர். அவர்களை எழும்பூர் (எக்மோர்) ரயில் நிலையத்தில்போலீசார் வளைத்து பிடித்தனர்.
இந்த சம்பவத்தின்போது, அதில் சம்பந்தப்படாத ஆல்வின் என்ற வழக்கறிஞரைபோலீசார் அடித்தனர் என வழக்கறிஞர்கள் கூறி செவ்வாய்க்கிழமையன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடடனர்.
சென்னை உயர் நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றம் மற்றும் கிளை நீதிமன்றங்களையும்வழக்கறிஞர்கள் புறக்கணித்தனர்.
மேலும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய வழக்கறிஞர்களின் சிறப்புகூட்டம் ஒன்று புதன்கிழமையன்று கூட்டப்படுகிறது.
வழக்கறிஞரை அடித்த போலீசாரை தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications