கோவை நீதிமன்றத்தில் பவர் கட்

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவையில் ரூ. 10 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நீதிமன்றத்தில், ஜெனரேட்டர் வசதிஇருந்தும்,வழக்குகளை விளக்கு வைத்து ஊழியர்கள் கவனித்தனர்.

கோவையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே ஓடும் வெள்ளத்தால்,போக்குவரத்து கடும் பாதிப்பிற்குள்ளாகியது. கனமழை பெய்யும்போது ரோடுகளில் ஓடும் வெள்ளத்தால் குறைந்தபட்சம் மூன்று மணி நேரமாவது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வெள்ளம் ஓரளவு வடிந்து விடுவதால் இந்தப்பிரச்னை தொடர்ந்து நீடிப்பதில்லை. ஆனால், மழை பெய்யும்போது, மின்சாரம் தடைபட்டு விடுகிறது. இதனால்,நகர் ழுவதும் இருளில் மூழ்கி விடுகிறது.

கோவையில் புதிததாக ரூ. 10 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள நீதிமன்ற வளாகத்தில் மின்சாரப் பிரச்னைஎழுந்துள்ளது. இந்த நீதிமன்ற வளாகத்திற்கு, மின்சாரம் தடைபடும் காலங்களில், உதவ ஒரு ஜெனரேட்டர்வசதியுடன் கூடிய "பவர் ஹவுஸ் உள்ளது. இந்த ஜெனரேட்டரை இயக்க பணியாளர் ஒருவரும்அமர்த்தப்பட்டுள்ளார்.

ஆனால், ஜெனரேட்டரை இயக்க டீசல் மட்டும் இல்லை. எனவே, நீதிமன்றத்தில் ஜெனரேட்டர் வசதியிருந்தும்,மின்சாரம் இல்லாததால் ஊழியர்கள் அவதிப்பட்டனர்.

விளக்கு ஒளியில் வழக்குகளை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நடுவர் நீதிமன்றங்களில் உள்ளமாஜிஸ்திரேட்டுகள் விளக்கு ஒளியில் வழக்குகளை விசாரணை செய்தனர். நீதிமன்றங்களில் ஏற்கனவேதேங்கியுள்ள வழக்குகளினால் திணறி வரும், வக்கீல்கள், நீதிபதிகள் மற்றும் பணியாளர்கள் கடும் சிரமத்திற்குஇடையே பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+