ஹாக்கி: தென் கொரியாவைத் தோற்கடித்து அரையிறுதியில் நுழைந்தது ஆஸ்திரேலியா
சிட்னி:
ஹாக்கிப் போட்டியில் ஆண்களுக்கான பி பிரிவில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல்கணக்கில் தென் கொரியாவைத் தோற்கடித்து அரையிறுதியில் நுழைந்தது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த முதல் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி பிபிரிவிலிருந்து அரையிறுதிக்குத் தகுதி பெறும் நிலை இருந்தது. இரு அணிகளும் பிபிரிவில் 8 புள்ளிகள் எடுத்து முன்னிலையில் இருந்தன.
இந்த ஆட்டம் டிராவில் முடிந்தால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள்கிடைக்கும். 9 புள்ளிகளுடன் இரு அணிகளும் அரையிறுதிக்கு நுழைய வாய்ப்புஇருந்தது.
அதாவது இந்தியாவுக்கும், போலந்துக்கும் இடையேயான ஆட்டத்தில் இந்தியாதோற்றாலோ அல்லது ஆட்டம் டிராவானாலோதான் இரு அணிகளுக்கும் அந்தவாய்ப்பு கிட்டுவதாக இருந்தது.
ஆனால், செவ்வாய்க்கிழமை நடந்த ஆட்டத்தில் எந்த வித கணக்கீட்டுக்கும் வழிஏற்படுத்தாமல் 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று முதல்அணியாக அரையிறுதியில் நுழைந்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையேயான ஆட்டத்தில் 8-வதுநிமிடத்திலேயே தென் கொரிய வீரர் சோங் சீயுங்-டே கோல் போட்டி தனது அணிக்குமுன்னிலை ஏற்படுத்தித் தந்தார். ஆனால், அதற்குப் பிறகு இரு கோல்கள் போட்டுஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இந்தியாவுக்கும் போலந்துக்கும் இடையேயான ஆட்டத்தில் இந்தியா வெற்றிபெற்றால் அரையிறுதிக்குத் தகுதி பெறும். மாறாக டிரா கண்டால் அரையிறுதிக்குத்தகுதி பெறுவது தென் கொரியாவா, இந்தியாவா என்று கோல்கள் வித்தியாசத்தில்கணக்கிட்டு முடிவு செய்யப்படும்.
ஆனால், போலந்திடம் இந்தியா தோற்றால் பி பிரிவிலிருந்து இரண்டாவது அணியாகஅரையிறுதிக்கு தென் கொரியா தகுதி பெற்றுவிடும்.












Click it and Unblock the Notifications