ஸ்பிக் ஊழல்: நீதிமன்றத்தில் ஜெ. ஆஜராக வேண்டும்
சென்னை:
ஸ்பிக் ஊழல் வழக்கில் அடுத்த மாதம் 5 ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி அதிமுக பொதுச் செயலாளருக்கு, முதலாவது தனிநீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அரசு நிறுவனமான டிட்கோவின் பங்குகளை ஸ்பிக் நிறுவனத்துக்கு குறைந்த விலைக்கு விற்றார். இதனால்அரசுக்கு ரூ 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் தொழில்துறை செயலர் ராமச்சந்திரன், ஸ்பிக் நிறுவனத் தலைவர் ஏ.சி.முத்தைய்யா, ஆகியோர்மீது சிபிஐ வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்குத் தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் செப்டம்பர் 4 ம் தேதி ஜெயலலிதா உள்படமூவருக்குக் குற்றப்பத்திரிக்கை நகல்கள் வழங்கப்பட்டன.
இதற்கிடையே குற்றப்பத்திரிக்கையில் உள்ள விவரங்கள் தெளிவாக இல்லை என்றும், மீண்டும் புதிய குற்றப்பத்திரிக்கை வழங்கும்படியும் ஜெயலலிதாமற்றும் ஏ.சி.முத்தையா ஆகியோர் முதலாவது தனி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இதையடுத்து அவர்களுக்குத் தெளிவான நகல்கள் வழங்க உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை தனிநீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் விசாரித்தார்.
அவர் இந்த வழக்கை அக்டோபர் மாதம் 5 ம் தேதிக்குத் தள்ளிவைத்தார். அவர், அன்றைய தினம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளஜெயலலிதா, ஸ்பிக் நிறுவனத் தலைவர் ஏ.சி.முத்தையா, முன்னாள் தொழில்துறைச் செயலர் ராமச்சந்திரன் ஆகியோர் ஆஜராக வேண்டும் என்றும்உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications