பந்த் நடத்த வேண்டாம் என்கிறது கர்நாடக அரசு
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமாரை மீட்க 4 வது முறையாகக் காட்டுக்குச் சென்றுள்ள அரசுத்தூதர் கோபால் செவ்வாய்க்கிழமை இரவு வீரப்பனை சந்திப்பார்.இதனால் 28 ம் தேதி பந்த் நடத்த வேண்டாம் என்று உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை இரவு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
வீரப்பன் பிடியிலுள்ள நடிகர் ராஜ்குமாரையும், அவரது உறவினர்கள் 3 பேரையும் மீட்பதற்காக கடந்த புதன்கிழமை இரவு கோபால் சத்தியமங்கலம்காட்டுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அந்தப்பகுதியில் அடைமழை பெய்து வருவதால் கோபால், வீரப்பனை சந்திப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. செவ்வாய்கிழமை இரவு எப்படியும் அவர்வீரப்பனைத் தொடர்பு கொள்வார் என்ற திடமான நம்பிக்கை உள்ளது.
இதனால் 28 ம் தேதி பந்த் போராட்டத்தை ராஜ்குமார் ரசிகர்களும், கன்னட சினிமாத்துறையினரும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
வீரப்பனிடம் பேசி, அவர் மனதை மாற்றி ராஜ்குமாரையும், மற்றவர்களையும் கோபால் அழைத்து வந்துவிடுவார் என்று நம்புகிறோம். அதனால்பந்த் நடத்த வேண்டாம் என்று மல்லிகார்ஜூன கார்கே வேண்டுகோள் ராஜ்குமார் ரசிகர்களுக்கும், கன்னட சினிமாத் துறையினருக்கும் வேண்டுகோள்விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications