ஜாதிகளில் சிக்காமல் இந்தியராக இருப்போம்!
சென்னை:
ஜாதியில் சிக்காமல் இந்தியராக இருப்போம் என்று தமிழ்நாடு பாரதீய ஜனதாக் கட்சித்தலைவர் கிருபாநிதி கூறினார்.
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் வேலூர் பெருங்கோட்ட பிரதிநிதிகள் மாநாடுஒசூரில் நடந்தது. மாநாட்டில் தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் கிருபாநிதிபேசுகையில், தமிழகத்தில் சாதிக் கட்சிகள் புற்றீசல்கள் போல் முளைத்து வருகின்றன.இதில் சிக்காமல் இந்தியர் என்ற உணர்வோடு இருப்போம்.
2001ல் நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலில் 40 அல்லது 50 எம்.எல்.ஏ.க்களையாவதுதேர்வு செய்து சட்டசபைக்கு அனுப்பும் வகையில் ஒன்றிணைந்து பணியாற்றவேண்டும் என்றார்.
அகில இந்திய பா.ஜ.க. பொதுச் செயலாளர் வெங்கய்யா நாயுடு பேசுகையில்,தலைசிறந்த மொழியான தமிழில் பேச இயலாமைக்கு வருத்தப்படுகிறேன்.இந்தியாவை தலைசிறந்த நாடாக உருவாக்கும் வகையில் ப.ாஜ.க. செயல்பட்டுவருகிறது.
மூன்று கோடி உறுப்பினர்களை கொண்ட கட்சியாக பா.ஜ.க. திகழ்கிறது. ஒரு காலகட்டத்தில் சிறிய கட்சியாக இருந்த பாஜக தற்போது பெரிய கட்சியாகஉருவெடுத்துள்ளது. வாஜ்பாய் தலைமையை ஏற்க இன்று பல்வேறு கட்சிகள் போட்டிபோடும் நிலை உருவாகி வருகிறது.
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு வகுப்பு கலவரமோ, மதக்கலவரமோ இல்லை. பா.ஜ.க.அமைச்சரவையில் உள்ள எந்தவொரு அமைச்சர் மீதும் ஊழல் குற்றச்சாட்டு இல்லை.
முஸ்லீம்கள் மற்றும் சிறுபான்மை இன மக்கள் பா.ஜ.க.விற்கு வருவதைவரவேற்கிறோம். தலித் இனத்தை சேர்ந்த ஒருவரைத் தான் பா.ஜ.க. தலைவராககொண்டுள்ளது.
காஷ்மீரில் தீவிரவாதம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்டு வருகிறது. இன்னும்இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் தீவிரவாதம் அடியோடு ஒழிக்கப்பட்டு விடும்என்றார்.
அகில இந்திய துணைத் தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி பேசுகையில்:
நரசிம்மராவ் பிரதமராக இருந்த காலத்தில் காங்கிரஸ் ஏழை எளியவர்கள்,விவசாயிகளுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. மாறாக ஊழல் தான் தலைவிரித்தாடியது.
காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்ட சீர்கேடுகள் படிப்படியாக களையப்பட்டு வருகிறது.யாரும் குற்றம் சொல்ல முடியாத வகையில் ஊழலற்ற ஆட்சியை நடத்தி வருகிறோம்.பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் வன்முறை தலைவிரித்தாடுகிறது.
வன்முறையை தூண்டுவோர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.பிரதமரின் அயல்நாட்டு உறவுக்கு அவருடைய தனிப்பட்ட திறமையே காரணம். உலகநாடுகள் மதிக்கத்தக்க தலைவராக வாஜ்பாய் மாறி வருகிறார் என்றார்.
-
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications