ஜெ. நகைகளை சரி பார்க்க 50 பேர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான 4 கோடிரூபாய் மதிப்புள்ள நகைகளைமதிப்பீடு செய்ய பதிவு பெற்ற 50 நகை மதிபீட்டாளர்கள் பட்டியல் அரசு தர்ப்பில்செவ்வாய்க்கிழமை தனி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகியோர் வருமானத்துக்குஅதிகமாக 68 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குதொடர்ந்திருந்தனர்.

ஜெயலலிதாவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கவைர நகைகளையும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த நகைகள் தற்போது நீதிமன்ற பாதுகாப்பில், இந்திய ரிசர்வ் வங்கியின் லாக்கரில்வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், உம்மிடி நந்தகோபால் என்ற நகை மதிப்பீட்டாளர் வருமானவரித்துறையினரால் நியமிக்கப்பட்டார். அவர் தன்னால் நகைகளை மதிப்பீடு செய்யஇயலாது என நீதிமன்றத்துக்கு கடிதம் அனுப்பி வைத்தார்.

பின்னர் பிரணாவ். எச் மேத்தா, சுகுமார், உம்மிடி கண்ணன் ஆகியோர் நகைமதிப்பீட்டிற்காக நியமிக்கப்பட்டனர். அவர்களும் நகையை மதிப்பிட இயலாது எனநீதிமன்றத்திற்கு கடிதம் அனுபபினர்.

இந்த வழக்கு திங்கள் கிழமையன்று விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பினர் புதிய நகைமதிப்பீட்டாளர் பட்டியலை தாக்கல் செய்வதாகக் கூறினார். இதன் படி செவ்வாய்க்கிழமை50 பேர் கொண்ட நகை மதிப்பீட்டாளர் பட்டியலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.இதில் நகையை மதிப்பீடு செய்ய இயலாது என்று கூறிய 4 பேர் பெயரும் அடங்கியுள்ளது.

முதலாவது நீதிமன்ற நீதிபதி ஆறுமுகப் பெருமாள் இந்த வழக்கை வரும் 28-ம் தேதிக்குஒத்தி வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+