கர்நாடக பந்த்: 6 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
கர்நாடகத்தில் வியாழக்கிழமை பந்த் நடக்கவிருப்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நடிகர் ராஜ்குமாரை விரைவில் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ராஜ்குமார் ரசிகர்கள் சங்கம் மற்றும் கர்நாடக திரைப்படவர்த்தக சபையினர் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, பள்ளிகள், கல்லூரிகளுக்கு 28 ம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது.
பெங்களூர், மண்டியா, சாம்ராஜ்நகர், ஹாசன், ஷிமோகா, மைசூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள் மற்றும்கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்ற அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications