தமிழர்களை திசை திருப்ப முடியாது .. வாழப்பாடி
சென்னை:
தமிழக மக்களை எந்த போராட்டத்தாலும் திசை திருப்ப முடியாது என்று தமிழக ராஜீவ்காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்துதற்போதுள்ள திமுக அரசுக்கு எதிராக காங்கிரஸ், அதிமுக, தமாகா, இடது சாரி கட்சிகள்சேர்ந்து போர்கொடி தூக்கியுள்ளன.
சேலம் இரும்பு உருட்டாலை பிரச்சினைக்காக சில நாட்களுக்கு முன் அதிமுகபோராட்டம் நடத்தியது. இப்போது விவசாயிகள் பிரச்சினைகளுக்காக போராட்டம்நடத்துவதாக தமாகா அறிவித்துள்ளது.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலை மையமாக வைத்து திமுக அரசுக்கு அவப்பெயர்ஏற்படுத்தும் நோக்கில் எதிர்க்கட்சிகள் இத்தகைய போராட்டங்களை நடத்துகின்றன.
தாங்கள்தான் விவசாயிகளுக்கு சாதகமாக இருப்பதாக காட்டிக் கொள்ளவே அக்கட்சியினர் முயற்சிக்கின்றனர். ஆனால், விவசாயிகளுக்கு கருணாநிதிதலைமையிலான திமுக அரசு பெருமளவு உதவிகள் செய்துள்ளது.
அரசு விழாக்களில் எல்லாம் அரசு செய்த உதவிகளை முதல்வர் கருணாநிதிபட்டியலிட்டுப் பேசி வருவதை மக்கள் நன்கு அறிவார்கள். ஆகவே எதிர்க்கட்சிகளின்அரசியல் நாடகத்தை மக்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் எத்தனை கட்சிகள் கூட்டுசேர்ந்தாலும் வெற்றி பெற முடியாது. எதிர்க்கட்சித் தலைவர்கள் எல்லாம் சமயத்துக்குஏற்றார்போல் செயல்படும் பச்சோந்திகளை விட மோசமானவர்கள் என்று தமிழகமக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலானதேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.இது உறுதி.
தமிழக மக்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். அவர்களை எந்த போராட்டமும் திசைதிருப்ப முடியாது என்றார் வாழப்பாடி.
-
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான்












Click it and Unblock the Notifications