ராஜ்குமார் கேசட் பேச்சு: ரஜினி கேட்டார்
சென்னை:
நக்கீரன் ஆசிரியர் கோபாலிடம் வீரப்பன் கொடுத்தனுப்பிய கேசட் நக்கீரன் நிருபர் சுப்பு மூலமாக சென்னை வந்தது. இந்த கேசட்டை ரஜினியும் கேட்டார்.
ராஜ்குமார் கடத்தல் விவகாரத்தில் ரஜினிகாந்த் மிக அதிகமாக ஆர்வம் காட்டி வருவது நமக்ெகெல்லாம் தெரிந்தது தான். பலமுறை முதல்வர்கருணாநிதியை சந்தித்து ராஜ்குமார் மீட்பு குறித்து பேசியுள்ளார்.
காட்டுக்குக் கூட போகத் தயார் எனவும் அறிவித்திருந்தார். பெங்களூரைச் சேர்ந்தவரான ரஜினிகாந்த் ராஜ்குமார் குடும்பத்தினரையும் சந்தித்துப்பேசினார்.
இந் நிலையில் ராஜ்குமார் பேசிய 5வது ஆடியோ கேசட்டை தமிழக அரசு மூத்த அதிகாரிகள் ரஜினிகாந்து வீட்டுக்கு கொண்டு சென்றனர். முதலில்இன்னொரு கேசட்டா என அதிர்ச்சி அடைந்த ரஜினி பின்னர் அதைக் கேட்டார்.
கேசட்டில், ராஜ்குமார். திருவிழா (தசரா) நேரத்தில் பந்த் வேண்டாம் என்று மட்டும் கூறியுள்ளார். ஆனால், பந்தே நடத்த வேண்டாம் என்று அவர்கூறவில்லை.
இதை தமிழக அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து வைத்திருக்கிறார்கள்.
இரண்டு நிமிடம் தான் பேசியிருக்கிறார் என்றாலும் உருக்கமாகவே இருக்கிறது அவரது குரல். பர்வதம்மா உடம்பை நல்லா பார்த்துக்கிட்டா நானும்நல்லா இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.