கோர்ட்டுக்கு கொண்டு செல்லும் வழியில் 6 கைதிகள் படுகொலை
லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரான்பூர் அருகே 5 விசாரணைக் கைதிகள் உள்பட 6 கைதிகள் நீதிமன்றத்துக்குக் கொண்டு வரும் வழியில் அடையாளம்தெரியாத கும்பலால் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டர்.
கடந்த பிப்ரவரி மாதம் மிக்காபூர் கிராமத்தில் அண்ணன்-தம்பி ஆகிய இருவர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டைக் கொலை தொடர்பாக ஆறுபேர் கைது செய்யப்பட்டு தியோபாத் சப் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். ஜெயிலில் அடைக்கப்பட்ட 6 கைதிகளில் 5 பேர் விசாரணைக் கைதிகள்.
இவர்கள் 6 பேரும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்காக சஹாரான்பூரிலுள்ள நீதிமன்றத்துக்கு போலீஸ் வாகனத்தில் கொண்டு வரப்பட்டனர்.
போலீஸ் வாகனம் ஆள்நடமாட்டமில்லாத பகுதியான சகான் காலன் கிராமப்பகுதியில் வந்து கொண்டிருந்த போது அப்பகுதியில் வாகனம் செல்ல முடியாத படிசாலை மறிக்கப்பட்டிருந்தது.
உடனடியாக போலீஸ் வாகனம் நிறுத்தப்பட்டது. அடுத்த நிமிடம் அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று 6 கைதிகளையும் சுட்டுக் கொன்றது. இச்சம்பவத்தில்போலீஸ் ஏட்டு ஒருவரும் காயமடைந்தார்.
அக்கும்பல் குறித்த விவரம் எதுவும் தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக இப்படுகொலைச் சம்பவம் நடந்திருக்கலாம் என்று நம்புகிறோம்.கொல்லப்பட்டவர்களில் 3 பேர் உடன்பிறந்த சகோதரர்கள் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications