குழப்பமாக உள்ளது ...எஸ்.எம். கிருஷ்ணா
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
வீரப்பன் பிடியிலிருந்து நாகப்பா தப்பியது குறித்து குழப்பமாக உள்ளது. இதுகுறித்துமுழுத் தகவல்கள் தெரிய வந்தவுடன்தான் தெளிவு கிடைக்கும் என்று கர்நாடகமுதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.
நாகப்பா தப்பியது குறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் முதல்வர் கிருஷ்ணாகூறுகையில், நாகப்பா தப்பி வந்ததாக கூறப்படும் சம்பவங்கள் தமிழக எல்லைக்குள்நடந்துள்ளன.
இதுகுறித்துஎனக்கோ அல்லது காவல்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கோதெளிவான தகவல் ஏதும்கிடைக்கவில்லை.
இருப்பினும் இதுதொடர்பாக விசாரிக்குமாறு சாம்ராஜ்நகர் எஸ்.பி. அண்ணேகவுடாவைக் கேட்டுக் கொண்டுள்ளேன் என்றார் கிருஷ்ணா.












Click it and Unblock the Notifications