For Daily Alerts
Just In
ஜெ. வழக்குகளை விசாரிக்க புதிய நீதிபதி
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட அதிமுக வினர் மீதான ஊழல் வழக்குகளை விசாரித்து வரும் இரண்டாவது தனிநீதிமன்ற நீதிபதியாகஎஸ்.எஸ்.பி.தார்வேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இரண்டாவது தனிநீதிமன்ற நீதிபதி வி.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை ஓய்வுபெறுகிறார். இதையடுத்து தார்வேஷ் சென்னை இரண்டாவது தனிநீதிமன்றநீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதியாக இருந்து வருகிறார் எஸ்.எஸ்.பி.தார்வேஷ்.
Story first published: Friday, September 29, 2000, 5:30 [IST]