லஞ்ச வழக்கில் நரசிம்மராவுக்குத் தண்டனை கிடைக்குமா?
டெல்லி:
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதில் முன்னாள்பிரதமர் நரசிம்மராவ் உள்பட பேருக்குத் தண்டனை கிடைக்குமா என்பது தெரிய வரும்.
1993-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் மீதான காங்கிரஸ் அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில்நரசிம்மராவ் அரசு வெற்றி பெற்றது.
ஆனால் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பிக்களுக்கு நரசிம்மராவ் லஞ்சம்கொடுத்ததாகக் கூறி சி.பி.ஐ. வழக்குத் தொடர்ந்தது. இதில்நரசிம்மராவ் தவிர, கர்நாடக முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி, ராவ் உறவினர் ராஜேஸ்வர ராவ், முன்னாள் மத்திய அமைச்சர்கள் சதீஷ் சர்மா,பூட்டா சிங், முன்னாள் முதல்வர் பஜன்லால், கர்நாடக முன்னாள் அமைச்சர்கள் ரேவண்ணா (முன்னாள் பிரதமர் தேவ கெளடாவின் மகன்), ராமலிங்கரெட்டி, பெங்களூர் மது வியாபாரி திம்மே கெளடா, டி.கே.ஆதிகேசவலு ஆகியோர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை நீதிபதி அஜீத் பரிஹோட் தீர்ப்பு வழங்குகிறார்.