For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆற்று வெள்ளத்தில் சிக்கிய சிறுத்தை மீட்பு

By Staff
Google Oneindia Tamil News

நாகர்கோவில்:

கன்னியாகுமரி மாவட்டம் கீழ் கோதையார் முகாம் பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில்அடித்துச் செல்லப்பட்ட 3 வயது அரிய வகை சிறுத்தையை வனத்துறைக் காவலர்கள்மீட்டனர்.

குலசேகரம் அருகே காட்டுப் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. வெள்ளத்தில் சிக்கி,மிகவும் மோசமான நிலையில் இந்த சிறுத்தை கண்டுபிடிக்கப்பட்டது. இதைப் பார்த்தவனத்துறை ஊழியர்கள் உடனடியாக சென்று சிறுத்தையை மீட்டனர்.

வலையைப் போட்டு சிறுத்தையைப் பிடித்த வனத்துறை ஊழியர்கள் அதைகோதையாறு கால்நடை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பழுப்பு நிறத்தில், கருப்புப் புள்ளிகளுடன் காணப்பட்ட இந்த சிறுத்தை, அரியவகையைச் சேர்ந்தது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X