For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லஞ்ச வழக்கில் நரசிம்மராவுக்குத் தண்டனை

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

Narasimha Raoமுக்தி மோர்ச்சா கட்சி எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில்முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், முன்னாள் மத்திய அமைச்சர் பூட்டாசிங்ஆகியோருக்கு சி.பி.ஐ. நீதிமன்றம் தண்டனை விதித்தது.

கிரிமினல் சதி மற்றும் ஊழல் பிரிவுகளின் கீழ் அவர்களுக்கு இந்தத் தண்டனைவழங்குவதாக நீதிபதி அஜீத் பரிஹோட் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி சி.பி.ஐ. தனிநீதிமன்றத்தில் பார்வையாளர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இந்த வழக்கிலிருந்து முன்னாள் முதல்வர் பஜன்லால், முன்னாள் மத்திய அமைச்சர்அஜீத் சிங் உள்பட 9 பேரை நீதிபதி பரிஹோட் விடுவித்தார்.

தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்க என்ன மாதிரியான தண்டனை என்பது குறித்துஅக்டோபர் 11-ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி பரிஹோட் தெரிவித்தார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X