பஞ்சாலைத் தொழிலர்கள் ஸ்டிரைக்கில் இறங்குகிறார்கள்
கோவை:
போனஸ் வழங்கக் கோரி பஞ்சாலை தொழிலாளர்கள் வரும் அக்டோபர் 19-ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தத் தீர்மானித்துள்ளனர்.
கோவை, ஈரோடு பஞ்சாலைத் தொழிலாளர்கள் சங்கத்தின் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் கோவையில் நடந்தது. மறுமலர்ச்சித் தொழிலாளர் சங்கத் தின்தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
பஞ்சாலைத் தொழிலாளர்கள், மில் உரிமையாளர்களுடன் நடத்திய முதல் சுற்று தீபாவளிப் போனஸ் பேச்சுவார்த்தை தோல்வியடைந்து விட்டது. இதனையடுத்துகூட்டு நடவடிக்கை குழு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.
தொழிலாளர்களுக்கும், பஞ்சாலைத் தொழிலதிபர்களுக்கும் இடையே நடக்கும் பேச்சுவார்த்தைக்கு தலைமை வகிக்க தென்னிந்திய மில்கள் சங்கம்மறுத்து விட்டது. இந்த சங்கம், தீபாவளிப் போனஸ் பிரச்னையில் தலையிடாததை தொழிலாளர்கள் கூட்டு நடவடிக்கை குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
எனவே, பஞ்சாலைத் தொழிலாளர்கள் பிரச்னையில் அரசு தலையிட்டு சுமூகமான முடிவெடுக்க உதவ வேண்டும். போனஸ் பிரச்னைக்கு உடனடித் தீர்வுகாணக் கோரி வரும் அக்டோபர் 8, 9, 10 ஆகிய தேதிகளில், மில்களின் முன்பு கூட்டம் நடத்தப்படும்.
இதனையடுத்து, 12 மற்றும் 13ம் தேதிகளில் கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பேரணி நடத்தப்படும். இப் பிரச்னைக்கு தீர்வுஏற்படாவிட்டால், இதனையடுத்து அக்டோபர் 19ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும்.
அக்டோபர் 11ம் தேதி மீண்டும் கூட்டு நடவடிக்கை குழு கூடி, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்கும் போன்ற தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.