பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் ஹெலிகாப்டர் தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
நம்பலஸ் (பாலஸ்தீனம்):
பாலஸ்தீனியர்கள் கட்டுப்பாட்டில் உள்ள மேற்குக் கரை பகுதியிலுள்ள நேப்லஸ் என்ற நகரில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள், ஹெலிகாப்டர் மூலம்பாலஸ்தீனர்கள் மற்றும் பாலஸ்தீன போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
நேப்லஸ் நகரில் உள்ள யூதர்களின் புனித தலமாக கருதப்படும் ஜோசப் சமாதி அருகே கடந்த சனிக்கிழமை பாலஸ்தீனியர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இதனால் அங்கு வன்முறை மூண்டது. இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே கடும் மோதல் தொடர்ந்து நடந்து வருகிறது.இதுவரை 27 பாலஸ்தீனர்கள் இறந்துள்ளனர்.
வன்முறையைத் தடுப்பதற்காக இஸ்ரேல் ராணுவ வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை இரண்டு ஹெலிகாப்டர்கள் மூலம் துப்பாக்கிச் சூடு நடந்தனர். இதில்யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவத் தரப்பில் கருத்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications