ராஜ்குமாரை விட்டுவிடு...வீரப்பனுக்கு நெடுமாறன் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

மதுரை:

நடிகர் ராஜ்குமாரை உடனே விடுதலை செய்யுமாறு தமிழர் தேசீய இயக்கத் தலைவர் நெடுமாறன், வீரப்பனுக்கு வேண்டுகோள்விடுத்துள்ளார். இதற்கு நடுவே, வீரப்பனின் அண்ணன் மகன் மாதய்யனை காட்டுக்கு தூதராக அனுப்பத் தயார் என்று வழக்கறிஞர்கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

ராஜ்குமார் கடத்தப்பட்ட விவகாரத்தில், வீரப்பனிடம் இருந்து தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறனுக்கு சமீபத்தில் ஒருகேஸட் வந்தது. அந்த கேஸட்டில், தமிழக, கர்நாடக அரசுகள் தனது கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவதாகவும்,இரு அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்தும் வீரப்பன் பேசியிருந்தான்.

இந்த நிலையில் , தமிழர் தேசிய இயக்கத்தின் ஐந்தாவது மாநில மாநாடு மதுரையில் நெடுமாறன் தலைமையில் நடைபெற்றது.மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ராஜ்குமாரையும் மற்றவர்களையும் கடத்திச் சென்றது சட்டவிரோதமான செயல், இது போன்ற சட்ட விரோத செயல் மூலம்காவிரிப்பிரச்சனை, பெங்களூரில் திருவள்ளூவர் சிலை திறப்பு, தடா கைதிகள் விடுதலை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியாது.

எனவே கடத்திச்சென்றவர்களை உடனே விடுதலை செய்யவேண்டும் என்று வீரப்பனுக்கு வேண்டுகோள் விடுத்து தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.

விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்கவேண்டும், மத்திய அரசு விடுதலைப் புலிகளை அங்கீகரிக்கவேண்டும் என்றும்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+