1 கோடி மக்களிடம் கையெழுத்து வாங்குகிறது த.மா.கா
சென்னை:
மத்திய மாநில அரசுகளை எதிர்த்து ஒரு கோடி பேரின் கையெழுத்துக்களை திரட்ட தமிழ் மாநில காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
சென்னையில் செவ்வாய் கிழமை கட்சித் தலைவர் மூப்பனார் தலைமையில் நடந்த கூட்டத்தில் இம்டிவு எடுக்கப்பட்டது.
மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து கடந்த வாரம் சிறை நிரப்பும் போராட்டம் நடத்திய தமாகா, இரண்டாவதாக பெட்ரோல், டீசல் விலை உயர்வைகண்டித்து கையெழுத்து இயக்கம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தது.
இப்போராட்ட ஏற்பாடுகள் குறித்து விவாதிப்பதற்காக சத்தியமூர்த்திபவனில் செவ்வாய் கிழமை தமாகா மாநில நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
கட்சித் தலைவர் மூப்பனார் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், ஜெயந்திநடராஜன், தனுஷ்கோடி ஆதித்தன், சோ.பாலகிருஷ்ணன்,பீட்டர் அல்போன்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கையெழுத்து இயக்கத்தை புதன் கிழமை முதல் தொடங்குவது என்றும், தொகுதிவாரியாக 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் கையெழுத்துஇயக்கத்தை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி புதன்கிழமை தொடங்கும் இந்த இயக்கம் 9ம் தேதி வரை நடைபெறுகிறது. ஒரு கோடி கையெழுத்துக்கள் பெற்று, 11ம் தேதி கவர்னர்பாத்திமா பீவியிடம் ஒப்படைக்க தமாகா முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications