ராஜீவ் கொலையாளி முருகன் வரைந்த படத்திற்கு பரிசு
வேலூர்:
காந்திஜெயந்தியை முன்னிட்டு சிறையில் நடந்த ஓவியப் போட்டியில் ராஜீவ் காந்திகொலை வழக்கில் தூக்குதண்டனை வழங்கப்பட்டுள்ள முருகன் வரைந்த படத்திற்குமுதல் பரிசு கிடைத்துள்ளது.
காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, வேலூர் தெற்கு ரோட்டரி சங்கம் சார்பில்கைதிகளுக்கு மூக்கு கண்ணாடி வழஙகப்ட்டது. கைதிகளுக்கு விளையாட்டு உட்படபல போட்டிகள் நடத்தப்பட்டது.
ஓவியப் போட்டியில் ராஜீவ் காந்தியை கொன்ற வழக்கில் தூக்கு தண்டனைவழங்கப்பட்டுள்ள கைதி முருகன் வரைந்த பெரியார் படத்துக்கு முதல் பரிசுகிடைத்தது. ஆனால் பரிசை வாங்குவதற்கு முருகன் வரவில்லை.
பரிசாக ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டும், 500 ரூபாய் ரொக்கப்பணமும்கொடுக்கப்பட்டது. பரிசுத் தொகையில் முருகனுக்கு ஓவியம் வரையத் தேவையானபொருட்களை வாங்கித் தரும்படி சிறைத் துறை அதிகாரி கூறியதன் படி அந்தப்பொருட்கள் வாங்கிக் கொடுக்கபப்ட்டன.
இந்தப் படத்தை வரைய முருகன் ஒருமாதம் காலம் எடுத்துக் கொண்டுள்ளார். இநதப்படத்தை வரைய அவருக்கு தேவையான பெயிண்ட், போர்டு, பிரஷ் போன்றபொருட்களை சிறை அதிகாரிகள் அளித்துள்ளனர்.
முருகனுக்கு முதல் பரிசு கிடைத்ததை தெரிவித்தபோது அவர் சிறை அதிகாரிகளைகட்டிப்பிடித்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார். இதை தன் மனைவியிடம் தெரிவிக்கும்படிகேட்டுக் கொண்டார்.
பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த முருகன் வரைந்த படத்தைப் பார்த்த சக கைதிகள்முருகனை பாராட்டினர். அந்த ஓவியத்தில் ஸ்ரீதரன் என கையெழுத்திடப்பட்டிருந்தது.அது தனது மற்றொரு பெயர் என முருகன் தெரிவித்தார். சிறையில் முருகன்நூற்றுக்கணக்கான படங்களை வரைந்துள்ளார்.












Click it and Unblock the Notifications