இந்தியாவுக்கு ராணுவ தளவாட விற்பனை குறைந்துவிட்டது - ரஷ்யா
வாஷிங்டன்:
இந்தியாவுக்கு ராணுவ தளவாட விற்பனை குறைந்துவிட்டது என்று பாதுகாப்புத்தொடர்பான பத்திரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் மற்றும் பல சர்வதேச பாதுகாப்புஅமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள அந்த பத்திரிக்கை, ரஷ்யதுணைப் பிரதமர் இல்யா கிளேபனோவ் மற்றும் சில ரஷ்ய உயர் ராணுவஅதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு அந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இந்தியாவுடன் கடந்த 30 ஆண்டுகளாக ராணுவ தளவாட விற்பனை ஒப்பந்தத்தைரஷ்யா வைத்துக் கொண்டுள்ளது. ஆனால், சமீப காலமாக, இந்தியாவுக்கு ராணுவதளவாட விற்பனை குறைந்துவிட்டதாக அந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ராணுவ தளவாடங்களை அதிக அளவில் ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்கி வந்தது.ரஷ்யாவும் பிற நாடுகளை விட இந்தியாவுக்கு அதிக ராணுவ தளவாடங்களைவிற்பனை செய்து வந்தது.
ஆனால், இப்போது இரு நாடுகளும் வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. இதனால், இரு நாடுகளுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றுஅந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இப்போது ராணுவ தளவாட விற்பனை தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையேயானஉறவுதான் மாறியிருக்கிறதே தவிர, மற்றபடி ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியிலும்ராணுவ தளவாடங்களை இணைந்து உற்பத்தி செய்வதிலும் இணைந்து செயல்படுவதுஎன்று இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன என்றும் அவர்கள்கூறியுள்ளனர்.
இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான் ராணுவ தளவாட விற்பனைகுறைந்துவிட்டதற்கு சில உதாரணங்களை அந்தப் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
முன்னதாக 300 டி-90 ரக டாங்குகளை வாங்க இந்தியா முடிவு செய்திருந்தது. ஆனால்,பின்னர் அது 100 டாங்குகளாகக் குறைக்கபட்டது.
சு-20எம்.கே. ரக விமானங்களை ரஷ்யாவிடமிருந்து வாங்க இந்தியா ஒப்பந்தம்செய்து கொண்டது. ஆனால், பின்னர் அந்த ஒப்பந்தம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
அதேபோல் 40 சு-30 ரக விமானங்களை வாங்க 1996-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. ஆனால், விமானங்களின் எண்ணிக்கை 16 ஆகக்குறைக்கப்பட்டுவிட்டது.
இதுதவிர வேறு பல ராணுவ தளவாட விற்பனை ஒப்பந்தங்களும்குறைக்கப்பட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications