"முள்ளை முள்ளால் எடுக்க முயன்று கைதானவர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கஞ்சா விற்று கைதாகி சிறையில் இருக்கும் தாயை ஜாமீனில் எடுக்க மகன் கஞ்சாவிற்றபோது கைது செய்யப்பட்டார்.
சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றம் அருகே கஞ்சா விற்றுக்கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த நபரை சோதனையிட்டபோது அவரிடம் ஒரு கிலோ கஞ்சா பொட்டலம் இருந்தது.
அந்த நபர் வியாசர்பாடி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த மதன் என்று தெரிய வந்தது.மதனின் தாயார் பொட்டுக்கனி, பாரிமுனை ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதைக்கு அருகேகஞ்சா விற்கும் போது கைதானார். அவர் தற்போது சிறையில் இருக்கிறார்.
அவரை ஜாமீனில் விடுவிப்பதற்காக தாம் கஞ்சா விற்றதாக மதன் போலீசாரிடம்தெரிவித்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து மகனையும், தாய் இருக்கும் சிறைக்கு அனுப்பிவைத்தனர்.












Click it and Unblock the Notifications