பேரனைக் கொன்ற தாத்தா கைது

Subscribe to Oneindia Tamil

ஓமலூர்:

மருமகள் ஆசைக்கு இணங்காததால், ஆத்திரமடைந்த நபர், மருமகளுக்குப் பிறந்த 35நாட்களே ஆன ஆண் குழந்தையை கழுத்தை நெறித்துக் கொன்றார். அவரைப்போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள விருசாக் கவுண்டன்புதூரைச்சேர்ந்தவர் கந்தப்பன் (59). இவரது மகன் பழனியப்பன் (24). இவரது மனைவிபூங்கொடி (22). இவர்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் கந்தப்பன், பூங்கொடியிடம் தகாத உறவுக்கு அடிக்கடி வற்புறுத்திவந்துள்ளார். ஆனால், பூங்கொடி அவரது ஆசைக்கு இணங்க மறுத்து வந்தார்.

இந்நிலையில், கர்ப்பிணியான பூங்கொடி தனது தாய் வீட்டிற்குச் சென்று விட்டார்.அங்கு கந்தப்பன் செல்ல, அவரது மகன் தடை விதித்திருந்தார்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பூங்கொடிக்கு ஒரு அழகான ஆண்குழந்தை பிறந்தது.அவர் தொடர்ந்து குழந்தையுடன் தாய் வீட்டில் இருந்தார். கந்தப்பன் பேரனைக் காணவேண்டும் எனக் கூறி மகனிடமிருந்து அனுமதி பெற்று பூங்கொடியின் தாய் வீட்டிற்குச்சென்றார்.

அங்கு பூங்கொடியும் குழந்தை மட்டுமே தனியாக இருந்துள்ளனர். இந்தச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பூங்கொடியைக் கற்பழிக்க கந்தப்பன் முயன்றார்.ஆனால், பூங்கொடி கந்தப்பனின் பிடியிலிருந்து தப்பிச் சென்று விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த கந்தப்பன், தொட்டிலில் இருந்த குழந்தையை எடுத்துகழுத்தை நெறித்து கொன்றார். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.குழந்தையை மீண்டும் வந்து பார்த்த பூங்கொடி, அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாகபோலீசில் புகார் கொடுத்தார்.

புகாரைத் தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கந்தப்பனைக் கைது செய்துவிசாரணை செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+