விமானங்களை பாதியிலேயே தரையிறக்குவதை தவிருங்கள் ..!
சென்னை:
நடுவானில் கோளாறு என்று சொல்லி விமானங்கள் அவசர அவசரமாகதரையிறக்கப்படும் நிலைமையை உடனடியாக தடுத்து நிறுத்துங்கள் என்று மத்தியவிமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சரத்யாதவிற்கு எழுதியுள்ள கடிதத்தில்தமிழக முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த 10 நாட்களில் சென்னையில் இருந்து சிங்கப்பூர், போர்ட் பிளேர் போன்றநகரங்களுக்கு கிளம்பிய மூன்று விமானங்கள் சில பிரச்னைகள் காரணமாக மீண்டும்சென்னை விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளன.
இதனால், பயணிகள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளதால் இந்தியன் ஏர்லைன்ஸ்நிறுவனம், அலையன்ஸ் ஏர் நிறுவனம் தங்களது பராமரிப்பு பணிளையும்,சேவையையும் மேம்படுத்தி இனிமேற்கொண்டு இத்தகைய நிகழ்வுகள் ஏற்படாவண்ணம்பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட வேண்டும் என்றுஅமைச்சர் சரத்யாதவை அவர் வலியுறுத்தியுள்ளார்.