தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் ஆதரவு: ஒப்புக் கொள்கிறது பிரான்ஸ்
பாரிஸ்:
காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு தொடர்பிருப்பதை பிரான்ஸ் ஒப்புக் கொண்டுள்ளது.
இந்தத் தொடர்பு குறித்து பல மேற்கத்திய நாடுகளுக்குத் தெரிந்திருந்தாலும் அதை வெளிப்படையாக சொல்லாமறுத்து வருகின்றன.
இப்போது பிரான்ஸ் தனது நிலையிலிருந்து இறங்கி வந்துள்ளது. தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் அளித்துவரும் ஆதரவை அந் நாடு சுட்டிக்காட்டி பேச ஆரம்பித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டு வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்துக்கு அளித்தபேட்டியில் இதை சுட்டிக் காட்டினார். பேட்டி விவரம்:
பாகிஸ்தான் ராணுவத்தின் ஒரு பிரிவின் ஆதரவு காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு இருந்து வருகிறது. இந்தப் பிரிவுவெறும் முரட்டுத்தனமான பிரிவா அல்லது அதற்கும் மேல் பலம் கொண்ட (அரசியல் பின்பலம்) பிரிவா என்பதைஎங்களால் தெரிந்து கொள்ள முடியவில்லை.
காஷ்மீர் பிரச்சனைக்கு யார் பொறுப்பு என குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதைவிட இந்தப் பிரச்சனையைத் தீர்க்கஇந்தியாவையும்-பாகிஸ்தானையும் பேச வைப்பதிலேயே நாங்கள் அதிக அக்கறை எடுத்து வருகிறோம்.
அதே நேரத்தில் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் ஆதரவளிப்பது குறித்து அந்த நாட்டு அரசுடன் நாங்கள்கடுமையாகவே பேசி வருகிறோம். பாகிஸ்தானுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தும்போதெல்லாம் இதை சுட்டிக்காட்டி வருகிறோம். பிரச்சனையைத் தீர்க்க உடனடியாக ஏதாவது செய்யுமாறு பாகிஸ்தானை நிர்பந்தித்தும்வருகிறோம்.
1972ம் ஆண்டு சிம்லாவில் வைத்து இந்தியாவும்-பாகிஸ்தானும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் கீழ் தான் இந்தப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். இந்தப் பிரச்சனையை ராணுவத்தால் தீர்க்க முடியாது. பேச்சுவார்த்தை தான் ஒரேவழி என்றார் தனது பெயரை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்ட அந்த பிரான்ஸ் வெளியுறவுத்துறைஅதிகாரி.
ஐ.ஏ.என்.எஸ்.