தாதா சோட்டா ராஜனை கைது செய்தது தாய்லாந்து
பாங்காக்: மும்பையின் மிகப் பெரிய தாதாவான சோட்டா ராஜனை தாய்லாந்து போலீசார் கைதுசெய்தனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் சோட்டா ராஜனை, மற்றொரு ரெளடியான தாவூத்இப்ராகிமின் கும்பல் சுட்டது. இதில் உயிர் பிழைத்தார் ராஜன். இவர் மீது தாய்லாந்தில்எந்த வழக்குகளும் இல்லாததால், அவர் இந்தியா திரும்புவதில் எந்தப் பிரச்சனையும்இருக்காது என முதலில் கூறப்பட்டது.
ஆனால், இப்போது போலி பாஸ்போர்ட் மூலம் நுழைந்ததாக தாய்லாந்துபோலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பையில் ஆள் கடத்தல், போதை மருந்து கடத்தல், ஆயுத கடத்தல், கொலை,கொள்ளை போன்ற பல்வேறு சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர் சோட்டாராஜன்.
பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவை விட்டு வெளியேறிய பிறகும் இந்தியாவில்உள்ள தனது ஆட்கள் மூலம் சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டவர் அவர்.
இந் நிலையில், கடந்த செப்டம்பர் 15-ம் தேதி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில்,மற்றொரு மும்பை தாதாவான தாவூத் இப்ராஹிம் குழுவினரால் சோட்டா ராஜன்சுடப்பட்டார்.
தற்போது அவர் பாங்காக் நகர மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில், போலி பாஸ்போர்ட் மூலம் தாய்லாந்துக்கு வந்து தங்கியுள்ளதாக அவரைஅந் நாட்டுப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இது பற்றி தாய்லாந்து நாட்டு குடியேற்றப் பிரிவு போலீஸ் தலைவர் ஹேமராஜ் தீராதாய்கூறியதாவது:
துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சோட்டாராஜனை நாங்கள் கண்காணித்து வந்தார். மும்பையிலிருந்து பாங்காக் வந்த 3 பேர்கொண்ட போலீஸ் குழு, சோட்டா ராஜனின் பாஸ்போர்டைச் சோதனை செய்தது.
அப்போது அந்த பாஸ்போர்ட் போலியானது என்று தெரியவந்தது. இதையடுத்துசோட்டா ராஜனை நாங்கள் கைது செய்தோம். போலி பாஸ்போர்ட் மூலம்சட்டவிரோதமாக தாய்லாந்துக்குள் நுழைந்ததாக அவர் மீது வழக்குப் பதிவுசெய்துள்ளோம்.
இந்த வழக்கு முடியும் வரை சோட்டா ராஜனை இந்தியாவுக்கு அனுப்பமாட்டோம்.இந்தியாவில் அவர் மீது பல வழக்குகள் உள்ளன என்றாலும், வழக்கு விசாரணைமுடிந்த பிறகே அவரை இந்தியாவுக்கு அனுப்புவோம் என்ரார் தீராதாய்.
தொடர்பான செய்திகள்:
செயற்கைக் கோளுடன் செயல்படும் சோட்டா ராஜன்