தாதா சோட்டா ராஜனை கைது செய்தது தாய்லாந்து
பாங்காக்: மும்பையின் மிகப் பெரிய தாதாவான சோட்டா ராஜனை தாய்லாந்து போலீசார் கைதுசெய்தனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் சோட்டா ராஜனை, மற்றொரு ரெளடியான தாவூத்இப்ராகிமின் கும்பல் சுட்டது. இதில் உயிர் பிழைத்தார் ராஜன். இவர் மீது தாய்லாந்தில்எந்த வழக்குகளும் இல்லாததால், அவர் இந்தியா திரும்புவதில் எந்தப் பிரச்சனையும்இருக்காது என முதலில் கூறப்பட்டது.
ஆனால், இப்போது போலி பாஸ்போர்ட் மூலம் நுழைந்ததாக தாய்லாந்துபோலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பையில் ஆள் கடத்தல், போதை மருந்து கடத்தல், ஆயுத கடத்தல், கொலை,கொள்ளை போன்ற பல்வேறு சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர் சோட்டாராஜன்.
பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவை விட்டு வெளியேறிய பிறகும் இந்தியாவில்உள்ள தனது ஆட்கள் மூலம் சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டவர் அவர்.
இந் நிலையில், கடந்த செப்டம்பர் 15-ம் தேதி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில்,மற்றொரு மும்பை தாதாவான தாவூத் இப்ராஹிம் குழுவினரால் சோட்டா ராஜன்சுடப்பட்டார்.
தற்போது அவர் பாங்காக் நகர மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில், போலி பாஸ்போர்ட் மூலம் தாய்லாந்துக்கு வந்து தங்கியுள்ளதாக அவரைஅந் நாட்டுப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இது பற்றி தாய்லாந்து நாட்டு குடியேற்றப் பிரிவு போலீஸ் தலைவர் ஹேமராஜ் தீராதாய்கூறியதாவது:
துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சோட்டாராஜனை நாங்கள் கண்காணித்து வந்தார். மும்பையிலிருந்து பாங்காக் வந்த 3 பேர்கொண்ட போலீஸ் குழு, சோட்டா ராஜனின் பாஸ்போர்டைச் சோதனை செய்தது.
அப்போது அந்த பாஸ்போர்ட் போலியானது என்று தெரியவந்தது. இதையடுத்துசோட்டா ராஜனை நாங்கள் கைது செய்தோம். போலி பாஸ்போர்ட் மூலம்சட்டவிரோதமாக தாய்லாந்துக்குள் நுழைந்ததாக அவர் மீது வழக்குப் பதிவுசெய்துள்ளோம்.
இந்த வழக்கு முடியும் வரை சோட்டா ராஜனை இந்தியாவுக்கு அனுப்பமாட்டோம்.இந்தியாவில் அவர் மீது பல வழக்குகள் உள்ளன என்றாலும், வழக்கு விசாரணைமுடிந்த பிறகே அவரை இந்தியாவுக்கு அனுப்புவோம் என்ரார் தீராதாய்.
தொடர்பான செய்திகள்:
-
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன்












Click it and Unblock the Notifications