கால் மூட்டு அறுவை சிகிச்சை: நாளை மும்பை செல்கிறார் வாஜ்பாய்
டெல்லி:
கால் மூட்டு வலி அறுவை சிகிச்சைக்காக பிரதமர் வாஜ்பாய், திங்கள்கிழமை மும்பைபுறப்பட்டுச் செல்கிறார்.
கடந்த மாதம் நாக்பூரில் பாஜக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அக் கூட்டத்தில்கலந்து கொண்டபோது பிரதமருக்கு திடீரென்று மூட்டு வலி ஏற்பட்டது.
உடனே, நாக்பூரிலிருந்து அவர் டெல்லி திரும்பி சிகிச்சை பெற்றார். அடுத்த சிலநாட்களில் அவர் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவேண்டிய நிலையில்அவருக்கு மூட்டு வலி ஏற்பட்டது.
இதையடுத்து அவர் அமெரிக்கா செல்வாரா மாட்டாரா என்று சந்தேகம் ஏற்பட்டது.இருப்பினும் மருத்துவக் குழு உதவியுடன் அவர் அமெரிக்கப் பயணம்மேற்கொண்டார்.
அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அறுவை சிகிச்சை செய்து கொள்ளவேண்டும் என்றுகூறினர். இந்தியா திரும்பியதும் அறுவை சிகிச்சை செய்து கொள்வதாக பிரதமர்வாஜ்பாய் அறிவித்தார்.
இதையடுத்து மும்பையில் உள்ள பிரீச் கேன்டி மருத்துவமனையில் அவருக்கு கால்மூட்டு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. இதற்காக, திங்கள்கிழமை அவர் மும்பைபுறப்பட்டுச் செல்கிறார்.
அவருக்கு அமெரிக்காாவில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர் சித்தரஞ்சன் ரனாவத்அறுவை சிகிச்சை செய்கிறார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications