For Daily Alerts
Just In
டான்சி வழக்கில் ஜெயலலிதா, சசிகலாவுக்கு 5 ஆண்டு சிறை
சென்னை:
முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவிற்கு டான்சி நில ஊழல் வழக்கில் சென்னை தனி நீதிமன்றம் 5 ஆண்டுகள்கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பு அளித்தது.
ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, முன்னாள் ஊரக தொழில்துறை அமைச்சர் முகம்மது ஆசிப், டான்சி நிறுவன முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாகஇயக்குநரான ஸ்ரீனிவாசன் ஆகியோருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டது. தனி நீதிமன்ற நீதிபதி அன்பழகன் இந்த தீர்ப்பை வழங்கினார்.
மேலும், நான்கு பேருக்கும் தலா ரூ. 10,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
தீர்ப்பு பற்றிய முழுவிபரங்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. ஜெயலலிதா,சசிகலா இருவரும் தனி நீதிமன்றத்திலேயே தான் இன்னும்இருக்கிறார்கள். இன்னும் சில மணி நேரங்களில் தீர்ப்பு குறித்த முழு விபரமும் வெளியாகும்.
Comments
Story first published: Monday, October 9, 2000, 5:30 [IST]