காஸ் சிலிண்டர் வெடித்து 3 சமையல்காரர்கள் சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வீட்டில் சமையல் பணியில் ஈடுபட்டிருந்த 3 சமையல்காரர்கள் காஸ் சிலிண்டர்வெடித்து பரிதாபமாக இறந்தனர்.
சென்னை மயிலாப்பூர் சிவசாமி சாலை பகுதியில் வசிப்பவர் பாலசுப்ரமணியம். இவர்திருமணம் போன்ற விசேஷங்களுக்கு சமையல் செய்து கொடுக்கும் சமையல்கான்ட்ராக்டர்.
திங்கள் கிழமை காலையில் தேனாம்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் மஞ்சள் நீராட்டுவிழாவுக்கு சமையல் செய்து கொண்டிருந்தார். இவரது தலைமையில் மூன்றுசமையல்காரர்கள் இப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சமையல் செய்து கொண்டிருக்கும்போது காஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாகதீ பிடித்தது. சிலிண்டர் வெடித்தது.
இச்சம்பவத்தில் ராஜேந்திரன் (45), சுந்தரம் (43), ராஜ் (43) ஆகிய மூன்று பேரும் உடல்கருகி இறந்தனர்.












Click it and Unblock the Notifications