கோவையில் 100 கம்ப்யூட்டர்களுடன் தகவல் தொழில்நுட்ப மையம்
கோவை:
பொறியியல் கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில், நூறு கம்ப்யூட்டர்வசதியுடன் ஒரு தகவல் தொழில்நுட்ப மையத்தை கோவையைச் சேர்ந்த பார்க்ஸ்பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அமைத்துள்ளது.
இந்த மையம் மூலம் கல்லூரியில் படிக்கும் பொறியியல் துறை மாணவர்கள்பயன்பெறுவர்.
கோவையில் பார்க்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி செயல்பட்டுவருகிறது. இங்கு பெங்களூரைச் சேர்ந்த லூமினேயர் டெக்னாலஜி என்ற நிறுவனம் ஒருகம்ப்யூட்டர் மையத்தை துவக்கியுள்ளது.
இந்த மையத்தில் முதல் கட்டமாக 100 கம்ப்யூட்டர் டெர்மினல்கள் நிறுவப்படுகின்றன.இந்த டெர்மினல்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் 500 ஆக உயர வாய்ப்பு உள்ளது.
மையம் குறித்து, லூமினேயர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவுஇயக்குநர் அன்ஜேஸ் கவுர் கூறியதாவது:
இந்த மையத்தின் மூலம் பார்க்ஸ் கல்லூரியில் படிக்கும் பொறியியல் துறைமாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும். சிவில் இன்ஜினியரிங் முதல் கம்ப்யூட்டர்டெக்னாலஜி வரை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இம் மையத்தில் மாணவர்களுக்குத் தேவையான அனைத்து சாப்ட்வேர்களும்வழங்கப்படும். குறிப்பாக "கேட் எனப்படும் கம்ப்யூட்டர் எய்டேடு டிசைனிங்அனைத்து மாணவர்களுக்கும் உதவியாக இருக்கும்.
இது தவிர, மாணவர்களின் வசதிக்காக அதிவேக இன்டர்நெட் வசதியும்அளிக்கப்படுகிறது. நேரடியாக செயற்கைகோள்களிலிருந்து டேட்டாக்களை இறக்குமதிசெய்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இன்டர்நெட் மூலம் மாணவர்கள், தங்களுக்குத் தேவையான தகவல்களை பெறமுடியும். மேலும், வீடியோ கான்பரன்ஸ் வசதிக்கும் ஏற்பாடு செய்து வருகிறோம்.மேலும், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப அவ்வப்போது புதியதொழில்நுட்பங்களையும் இந்த கம்ப்யூட்டர்களில் அமைத்துத் தரப்படும்.
24 மணி நேரம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த கம்ப்யூட்டர் மையம்செயல்படும். இந்த மையத்திற்காக ஒரு கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
இது போன்ற பல கம்ப்யூட்டர் மையங்களை லூமினேயர் நிறுவனம் விரைவில் பலஇடங்களில், நிறுவ உள்ளது. முதலில் தென்னிந்திய அளவிலும், பின்னர் இந்தியஅளவிலும் பல இடங்களில் நிறுவ உள்ளோம் என்றார்.
நிறுவன செயல் இயக்குநர் ஜிதேந்திரா ஷா, வர்த்தகப் பிரிவு அதிகாரி பிரமோத்கங்கோத்ரி, மேலாளர் ஸ்ரீதர் ஆகியோர் மாணவர்களுக்கு இந்த மையத்தின் மூலம்கிடைக்கும் பயன் குறித்தும், வர்த்தக மேம்பாடு குறித்தும் விளக்கினர்.












Click it and Unblock the Notifications