2 அமெரிக்கர்கள், ஒரு ஸ்டவீன் நாட்டவருக்கு மருத்துவ நோபல் பரிசு
Subscribe to Oneindia Tamil
ஸ்டாக் ஹோம்:
கெளரவம் மிக்க மருத்துவ நோபல் பரிசு, 2 அமெரிக்கர்களுக்கும், ஒரு ஸ்வீடன் நாட்டவருக்கும் வழங்கப்படுகிறது.
சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நோபல் பரிசுக் கழகம் இந்தப் பரிசைத் திங்கள்கிழமை அறிவித்தது.
பரிசு பெற்ற 3 மருத்துவர்களும் நரம்பு மண்டலத்தில் சமிக்ஞை பரிமாற்றம் குறித்த கண்டுபிடிப்பிற்காக பரிசு பெறுகின்றனர். ஸ்வீடனைச் சேர்ந்த அர்வித்கார்ல்சன், அமெரிக்காவைச் சேர்ந்த பால் க்ரீன்கார்டு மற்றும் எரிக் கேன்டல் ஆகியோர் பரிசு பெறுபவர்கள் ஆவர்.
இவர்களில், பால் க்ரீன்கார்டு நியூயார்க் ராக்பெல்லர் பல்கலைக்கழகத்திலும், எரிக் கேன்டல் கொலம்பியா பல்கலைக்கழகத்திலும், அர்விந்த்கால்சன் கோதேபெர்க் பல்கலைக்கழகத்திலும் பணிபுரிந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications