மண்ணின் மைந்தனால் 2 முறை விழா கண்ட சண்டிகர்
சண்டிகர்:
நாடு முழுவதும் தசரா விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அத்தோடு சேர்த்து மற்றொரு விழாவையும்இந்தியர்கள், குறிப்பாக சண்டிகர் நகர மக்கள் கொண்டாடினார்கள் என்றால் அது மிகையில்லை.
கென்யாவில் நடைபெற்று வரும் ஐ.சி.சி. நாக் அவுட் கிரிக்கெட் போட்டியின் கால் இறுதி ஆட்டத்தில்ஆஸ்திரேலியாவை இந்தியா தோற்கடித்த வெற்றி விழாதான் அது.
அதிலும் குறிப்பாக இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்த அந்த மேன் ஆப் தி மேட்ச் யுவராஜ் சிங் சண்டிகரைச்சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 80 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தது மட்டுமல்லாமல் சிறப்பான ஒரு கேட்ச்மற்றும் ஒரு ரன் அவுட்டுகளைச் செய்து இந்தியாவின் வெற்றி வழிவகுத்தவர் யுவராஜ் சிங்.
தான் கலந்து கொண்ட இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலேயே இத்தகைய சாதனையைப்புரிந்தவர் யுவராஜ் சிங்.
யுவராஜ் சிங்கின் ஆட்டம் சிறப்பாக இருந்ததை அணி கேப்டன் கங்குலியே ஒப்புக் கொண்டார். இந்திய கிரிக்கெட்ரசிகர்கள் மட்டுமல்ல யுவராஜ் சிங்கின் ஆட்டத்தை அகில உலக கிரிக்கெட் ரசிகர்களும் சிறப்பானது என்றுபாராட்டியுள்ளனர்.
அத்தகைய யுவராஜ் சிங் தங்களது நகரைச் சேர்ந்தவர் என்ற பெருமையில் யுவராஜ் சிங்கின் சிறப்பான ஆட்டத்தால்இந்தியா பெற்ற வெற்றியை சண்டிகர் நகர மக்கள் சிறப்பாகக் கொண்டாடினார்கள்.
நாடு முழுவதும் மக்கள் தசரா விழாவைக் கொண்டிய வேளையில் சண்டிகர் நகர மக்கள் தசரா விழாவுடன் கிரிக்கெட்வெற்றி விழாவையும் கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
நகர மக்கள் அனைவரும் வாண வேடிக்கைகளால் தங்களது மகிழச்சியைக் கொண்டாடினர். இளைஞர்கள் எல்லாம்சாலைகளுக்கு வந்து ஒருவருக்கு ஒருவர் யுவராஜ் சிங்கைப் பற்றி பாராட்டுக்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டனர்.
சிட்னி ஒலிம்பிக்கில் கர்னம் மல்லேஸ்வரி பெற்ற ஒரே வெண்கலப் பதக்கத்தால் இந்தியாவே சந்தோஷப்பட்டதைப்போல் சண்டிகர் நகர மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தங்களது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், இந்தியாவுக்கு அத்தகைய வெற்றியைத் தேடித் தந்ததாக நினைத்து அவர்கள்மகிழ்ந்தனர். அவர் நேரே யுவராஜ் சிங்கின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினரைச் சந்தித்து வாழ்த்துதெரிவித்தனர்.
எனது மகன் செய்த இச் சாதனையை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிரானஆட்டத்தில் விளையாடச் செல்வதற்கு முன் என்னிடம் யுவராஜ் சிங் தொலைபேசியில் பேசினான். இன்று நான்நிச்சயம் சாதிப்பேன் என்றான். எல்லோருக்கும் தனது முதல் போட்டியில் சாதிக்கவேண்டும் என்பதுதான் கனவாகஇருக்கும். அந்த கனவை எது மகன் நனவாக்கிவிட்டான் என்றார் யுவராஜ் சிங்கின் தந்தை சப்னம் சிங்.
யுவராஜ் சிங் அவுட்டானதைத் தவிர வேறு எந்த தவறையும் அவர் செய்யவில்லை. அவர் ஆடியது சிறப்பான ஆட்டம்என்றார் யுவராஜ் சிங்கின் பயிற்சியாளர் சுக்வீந்தர் பாவா.
யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங்கும் ஒரு கிரிக்கெட் வீரர்தான். நியுசிலாந்துக்கு எதிரான இரு டெஸ்ட்போட்டிகளில் இந்தியா சார்பில் விளையாடிவர் யோக்ராஜ் சிங்.
ஆனால், பெட்ரோலிலில் கலப்படம் செய்த கிரிமினல் வழக்கில் ஜாமீன் மறுக்கப்பட்டதை அடுத்து தற்போது அவர்தலைமறைவாக உள்ளார்.
யுவராஜ் சிங்கின் தாத்தா நிரஞ்சன் சிங் தாலிப், ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகி. பஞ்சாப் மாநில காங்கிரஸ்தலைவராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட்டுக்கு சண்டிகர் வழங்கியுள்ள 5-வது வீரர் யுவராஜ் சிங்.
ஏற்கெனவே கபில் தேவ், சேதன் சர்மா, அசோக் மல்ஹோத்ரா, யோக்ராஜ் சிங் ஆகியோர் இந்திய கிரிக்கெட்அணியில் இடம் பெற்றுள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications