For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாக். முன்னாள் அதிபரின் உதவியாளர் தற்கொலை?

By Staff
Google Oneindia Tamil News

பெஷாவர்:

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பரூக் அகமத் கான் லெகாரியின் உதவியாளர் சம்ஷேர் அலிகான் துப்பாக்கியால்சுட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

பெஷாவர் அருகே வாஸிராபாத் கிராமத்தில் வசித்து வந்த அவர், குண்டுக் காயங்களுடன் மருத்துவமனைக்குக்கொண்டு வரப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார்.

அவரது இடது கண் மற்றும் நெற்றிப் பகுதியில் குண்டுக் காயங்கள் இருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள்தெரிவித்தன.

முன்னாள் அதிபர் லெகாரியின் முதன்மைச் செயலராகப் பணியாற்றியுள்ள சம்ஷேர் அலி கான், சனிக்கிழமையன்றுஅதிகாலையில் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பினார்.

வீட்டுக் காவல்காரரைப் பார்த்து துப்பாக்கியைச் சுத்தம் செய்துவிட்டாயா என்று அவர் கேட்டுள்ளார். அதன் பிறகுஅவரும், காவல்காரரும் ஒரு அறைக்குள் சென்ற சிறிது நேரத்தில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

துப்பாக்கிக் குண்டு காயம்பட்ட அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், அங்கு அவர்இறந்துவிட்டார்.

சம்ஷேர் அலி கான் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவருடன் ஏற்பட்ட தகராறில்காவல்காரர் அவரைச் சுட்டுக் கொலை செய்தாரா என்று தெரியவில்லை.

போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். லெகாரியின் உதவியாளராக இருந்த சம்ஷேர் அலி கான்,பாகிஸ்தான் வடக்கு ஃபிரன்டியர் மாகாண உள்துறைச் செயலராகவும் பணியாற்றி உள்ளார்.

1997-ம் ஆண்டு அதிபர் பதவியிலிருந்து லெகாரி நீக்கப்பட்டவுடன் சம்ஷேர் அலி கானும் விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X