இன்சூரன்ஸ் துறையில் நுழைகிறது டாடா நிறுவனம்
மும்பை:
இந்தியாவில் மிகப் பெரிய தனியார் துறை நிறுவனங்களில் ஒன்றான டாடா நிறுவனம்ஜெனரல் மற்றும் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனியைத் தொடங்க உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த அமெரிக்கன் இன்டர்நேஷனல் குரூப் என்ற நிறுவனத்துடன்இணைந்து ரூ. 250 கோடி முதலீட்டில் இந்த இன்சூரன்ஸ் கம்பெனியை டாடாநிறுவனம் தொடங்க உள்ளது.
இரு நிறுவனங்களும் சரிபாதி முதலீட்டில் இந்த இன்சூரன்ஸ் கம்பெனிதொடங்கினாலும் கூட, அக் கம்பெனியின் 76 சதவீத பங்குகள் டாடாவிடமும், 24சதவீதம் அமெரிக்க நிறுவனத்திடமும் இருக்கும்.
அரசுத் துறையில் உள்ள இன்சூரன்ஸ் கம்பெனியைப் போன்ற சட்ட திட்டங்கள்,நெறிமுறைகளுடன் இந்த தனியார் துறை இன்சூரன்ஸ் கம்பெனியும் செயல்படும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
இன்சூரன்ஸ் துறையை தனியார்மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.இதற்கு இன்சூரன்ஸ் துறை ஊழியர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், இன்சூரன்ஸ் துறையில் தனியார்களை அறிமுகப்படுத்துவதில் மத்தியஅரசு உறுதியாக உள்ளது. இன்சூரன்ஸ் துறையில் நேரடி வெளிநாட்டு முதலீடுஅக்டோபர் மாதம் முதல் அதிகரிக்கும் என்று இன்சூரன்ஸ் துறைச் செயலர் பி.கே.பானர்ஜி தெரிவித்தார்.
தீபாவளிப் பண்டிகையின்போது முதல்கட்ட இன்சூரன்ஸ் உரிமங்கள் வழங்கப்படும்என்றார் அவர்.












Click it and Unblock the Notifications