"ஆபரேஷனுக்காக மருத்துவமனையில் வாஜ்பாய் அனுமதி
மும்பை:
மூட்டு வலி அறுவை சிகிச்சை செய்து கொள்ள மும்பை ப்ரீச்கன்டி மருத்துவமனையில் பிரதமர் வாஜ்பாய் திங்கள்கிழமை அட்மிட் செய்யப்பட்டார்.
சில வாரங்களுக்கு முன் திடீரென்று ஏற்பட்ட மூட்டுவலியால் வாஜ்பாய் அவதிப்பட்டு வந்தார். அந்த வலியுடனேயே அவர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தினர். இதையடுத்து கால் மூட்டு அறுவை சிகிச்சை செய்துகொள்ள வாஜ்பாய் ஒப்புக் கொண்டார்.
மும்பையில் உள்ள பிரீச்கன்டி மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் இந்திய மூட்டு அறுவை சிகிச்சைநிபுணரான சித்தரஞ்சன் ரனாவத் செவ்வாய்க்கிழமை இந்த அறுவை சிகிச்சையை செய்கிறார்.
அறுவை சிகிச்சைக்காக திங்கள்கிழமை காலை மும்பை வந்த வாஜ்பாய், நேராக மருத்துவமனைக்குச் சென்று அட்மிட் ஆனார். இதையடுத்து பிரதமரின்அலுவலகமும் மும்பைக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது.
மும்பையில் பிரதமர் இருக்கும்வரை அந்த அலுவலகமும் அங்கே செயல்படும். மருத்துவமனைக்கு அருகே உள்ள விருந்தினர் மாளிகையில் பிரதமரின்அலுவலகம் செயல்படும் என்று பிரதமரின் முதன்மைச் செயலர் பிராஜேஷ் மிஷ்ரா தெரிவித்தார்.
இதற்கிடையே, பிரதமருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ள பிரீச் கேன்டி மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மருத்துவமனை உள்ள பகுதியைச் சுற்றி சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை பாதுகாப்புப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications