"பள்ளி விண்ணப்பங்களில் சாதியைக் குறிப்பிட கட்டாயமில்லை
தூத்துக்குடி:
பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும்போது அவர்களது சாதி, மதம் பற்றி குறிப்பிடவோ அல்லது குறிப்பிடாமல் விடவோ அவர்களது பெற்றோர்களுக்குமுழு அதிகாரம் உள்ளது என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.
இதுதொடர்பாக, தமிழக அரசு, மாவட்டக் கல்வி அதிகாரிகள் மூலமாக பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
மாணவ, மாணவர்களை பள்ளிகளில் சேர்க்கும்போது குறிப்பிட்ட சேர்க்கை விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சேர்க்கிறார்கள். இந்த சேர்க்கை விண்ணப்பத்தில்அவர்களது சாதி, மதம் பற்றியும் குறிப்பிட வேண்டியுள்ளது.
இந்த அட்டவணையைப் பூர்த்தி செய்யும்போது, குறிப்பிட்ட சாதி மதத்தைக் குறிப்பிடவோ அல்லது குறிப்பிடாமல் விட்டுவிடவோ மாணவர்களின்பெற்றோர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. இந்த விஷயத்தில் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று தமிழக அரசு அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications