இது இறுதித் தீர்ப்பு அல்ல .. மூப்பனார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக கூறப்பட்ட தீர்ப்பு குறித்து கருத்து கூறதயங்குகிறேன் என்று தமாகா தலைவர் மூப்பனார் தெருவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தனி நீதிமன்றத் தீர்ப்பு குறித்து கருத்துச் சொல்லதயங்குகிறேன். காரணம் இது இறுதி தீர்ப்பு அல்ல. பாதிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய உரிமை உள்ளது. எனவே இதை பெரிதாக எடுத்துக் கொள்ளத்தேவையில்லை என்பதே என் கருத்து என்றார்.

சுப்ரமணியசாமியின் ஜனதா கட்சி மாநிலத் தலைவி சந்திரலேகா இந்த தீர்ப்பைவரவேற்றுள்ளார். ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் வழங்கப்பட்ட இந்த தண்டனைமுழுக்க முழுக்க நியாயமானது என்று கூறியுள்ளார் அவர்.

இதுகுறித்து சந்திரலேகா வெளியிட்ட அறிக்கையில், ஜனநாயக நெறிமுறைகளைசுயலாபத்திற்காக துஷ்பிரயோகம் செய்து பொது வாழ்க்கையை களங்கப்படுத்தும்ஊழல் அரசியல்வாதிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள சரியான சாட்டையடி இது.

இதுவரை அரசியல்வாதிகளால் செய்யப்படும் ஊழல், வன்முறை ஆகியவற்றிற்குவிசாரணை கமிஷன்கள் மட்டுமே அமைக்கப்பட்டது. ஊழல் புரிந்தஅரசியல்வாதிகளுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனையை பெற்றுத் தர முடியும் என்பதைஇந்த தீர்ப்பின் மூலம் நிரூபித்துக் காட்டியிருப்பவர் சுப்ரமணியசாமி.

கட்சிக்காக எந்த தியாகம் செய்யாமல் கட்சியை குறுக்கு வழியில் அபககரித்தஜெயலலிதாவும், அவரது தோழியும் எல்லாவிதமான பொருளாதார குற்றங்களைசெய்து சாதனை படைத்துள்ளனர். ஊழல் செய்வதில் உச்சக்கட்டத்தை அடைந்தஇவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நியாயமானது என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+