மாமூல் வசூலித்த 8 பேருக்கு "மாமியார் வீடு
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சியிலுள்ள காந்தி மார்க்கெட்டில் உள்ள கடை உரிமையாளர்களை மிரட்டிப் பணம்பறித்து வந்த 8 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து துணைப் போலீஸ் கமிஷனர் ஆறுமுகம் கூறுகையில், கடைஉரிமையாளர்களை மிரட்டிப் பணம் பறித்து வந்த இந்த எட்டு பேரைக் கைதுசெய்துள்ளோம். கைது செய்யப்பட்ட அனைவரும் மாஜிஸ்ட்ரேட் முன்நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகஇரண்டு போலீஸ் தனிப்படையை அமைத்துள்ளோம். அவர்கள் பிக்பாக்கெட்திருடர்களை அடையாளம் கண்டு கைது செய்வார்கள். ஏற்கனவே அவர்கள் 4பிக்பாக்கெட் திருடர்களை திங்கள்கிழமை கைது செய்துள்ளனர் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications