For Daily Alerts
Just In
வேன், லாரி மோதலில் 14 பேர் காயம்
சென்னை:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் வேனும், லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 14 பேர்காயமடைந்தனர். அவர்களில் 7 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை நடந்த இந்த விபத்தில் இறந்தவர்கள் அனைவரும் முடிதிருத்துபவர் நலச்சங்கத்தைச்சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
சென்னையில் நடக்கும் மாநில அளவிலான கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காக அவர்கள் வந்த போது இந்தவிபத்து நடந்ததாகப் போலீஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Tuesday, October 10, 2000, 5:30 [IST]