நரசிம்மராவுக்கு தண்டனை: நாளை ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஐார்கன்ட் முக்தி மோச்சா எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் மற்றும்முன்னாள் உள்துறை அமைச்சர் பூட்டாசிங் ஆகியோருக்கான தண்டனை வியாழக்கிழமை அறிவிக்கப்படும் எனசிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த வழக்கு மீதான தீர்ப்பு வியாழக்கிழமை காலை 10 மணிக்கு அறிவிக்கப்படும் சி.பி.ஐ. நீதிபதி அஜித் பாரிஹோக்புதன்கிழமை தெரிவித்தார்.

முன்னதாக, நீதிபதி பரிஹோக், நரசிம்மராவ் மற்றும் பூட்டாசிங் ஆகியோரது சார்பில் வாதாடிய வக்கீல்களின்வாதங்களை முழுமையாகக் கேட்டறிந்தார்.

1993 ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்தது. அப்போதைய பிரதமராக நரசிம்மராவும், உள்துறைஅமைச்சராக பூட்டாசிங்கும் இருந்தனர். ராவ் அரசு மீது லோக்சபாவில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதில் வெற்றி பெறுவதற்காக ஜார்கன்ட் முக்தி மோச்சா எம்.பி.க்களுக்கு நரசிம்மராவ் லஞ்சம்கொடுத்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து நரசிம்மராவ் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்குவிசாரணையின்போது, ஜார்கன்ட் முக்தி மோச்சா எம்.பி. ஒருவர் அப்ரூவராக மாறினார். நான்கு வருடவிசாரணைக்குப் பிறகு செப்டம்பர் 29 ம் தேதி நரசிம்மராவ், பூட்டாசிங் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+