பொய் பிரசாரம் செய்கிறார் கருணாநிதி .. அதிமுக எம்.பி புகார்
திருச்சி:
டான்சி வழக்கில் கொடுக்கப்பட்ட தீர்ப்பினால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஆறுஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாது என்று தமிழக முதல்வர் கருணாநிதிபொய்யான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார் என்று அதிமுக பொருளாளரும்,திண்டுக்கல் எம்.பியுமான சீனிவாசன் கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கீழ்க் கோர்ட்டில் தண்டனைபெற்ற பலருக்கு, சுப்ரீம் கோர்ட் தண்டனையை ரத்து செய்துள்ளது. அவர்களால்தேர்தலில் நிற்கவும் முடிந்திருக்கிறது.
ஜெயலலிதாவும் வரும் சட்டசபைத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவார். மீண்டும்அவரே முதல்வர் ஆவார்.
மக்கள் நலத் திட்டங்களில் முதல்வர் கருணாநிதி கவனம் செலுத்த வேண்டும். ஆனால்அதை விடுத்து ஜெயலலிதாவை பழி வாங்கும் நோக்கில் கருணாநிதி செயல்படுகிறார்.கடந்த நான்கரை ஆண்டுகளாகவே கருணாநிதி இப்படித்தான் செயல்பட்டு வருகிறார்.ஜெயலலிதாவையும், அதிமுகவினரையும் தாக்குவதே அவரது முக்கிய வேலையாகப்போய் விட்டது என்றார்அவர்.
முன்னதாக ஜெயலலிதாவிற்காக தீக்குளித்து கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக தொண்டர் ராஜாவை (32)சீனிவாசன் பார்த்து நலம் விசாரித்தார். ஜெயலலிதா சார்பில் ரூ. 10,000 பணத்தையும்அவர் கொடுத்தார்.
மக்கள் தீர்ப்பல்ல - கண்ணப்பன்
இதற்கிடையே, டான்சி வழக்கில் கொடுக்கப்பட்டுள்ள தீர்ப்பை மக்கள் தீர்ப்பாக கருதமுடியாது என்று மக்கள் தமிழ் தேசக் கட்சித் தலைவரும், முன்னாள் அமைச்சருமானகண்ணப்பன் கூறியுள்ளார்.
டான்சி வழக்கு குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், கோர்ட் தீர்ப்புகளை மக்கள்தீர்ப்பாக கருத முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications